புதன், 28 மார்ச், 2012

நான் கொண்ட காதல்


உன் கண்கள் எனும் காந்தத்தால்
என் இதயம் எனும் இரும்பை
களவாடிச் செல்கிறாய்
காரணம் கேட்டதற்கு
காதலைச் சாடினாய்  
வாரணம் புடைசூழ்ந்து
வாழ்க்கை மீது படை எடுத்தாய்
காதல் எனும் நாணேற்றி
கண்கள் எனும் கணை தொடுத்தாய்
என் இதயம் எனும் இலக்கில் விட்டாய்
நீ தொடுத்த கணை உன்னிடமே
என் இதயமோ உன் வசமே...
உன்னைத்தான் நேசித்தேன்
உன்னைத்தான் சுவாசித்தேன்
உன்னைத்தான் யாசித்தேன்
உன் அருகில் வரத் துடித்தேன்
என் அறியாமையில் வாடித் தவித்தேன்

என் கண்ணாடி இதயத்தில்
உன்னை வைத்து பூட்டிவிட்டு
வெளியிலே வெள்ளை அடித்தேன்
நான் மட்டும் காண்பதற்கு
கண்கள் எனும் யன்னல் வைத்தேன்
உயிரிலே உன்னை சுமந்து
ஊருக்கு தெரியாமல் நடித்தேன்
நினைவு எனும் ஜாடிக்குள்
காதல் எனும் செடி வைத்தேன்
கற்பனை எனும் நீர் ஊற்றினேன்
உயிரை உருக்கி உரமாக்கினேன்

நான் வளர்த்த காதல் செடி
வண்ணம் வண்ணமாய் பூக்கள் பூக்க
அப் பூக்களுக்கு சொந்தக்காரி
நீ மட்டும்  தானென்று
வார்த்தைகளில் சொல்லவந்தேன்
வாயடைத்துப்போய் நின்றேன்
உதடுவரை வந்த வார்த்தை
உன்னை பார்த்த கணமே
உயிரிலே உறைந்ததென்ன...

உன்னில் நான் கொண்ட காதல்
உலகிற்கு புரியாது
உனக்கும் தெரியாது
நான் கொண்ட காதலும்
ஊமை கண்ட கனவும்
உண்மையில் ஒன்றுதான்
உருவமில்லா என் காதலுக்கு
உயிர் கொடுத்தவள் நீதான்

சூரியனின் ஓளி பட்டு
தெறிக்கும் நிலவா நீ....
கதிரவனுக்கும் ஓளி கொடுக்கும்
உவமானம் இல்லா  உருவம் நீ...
பனித் துளிகள் உனை விட
பரிசுத்தமானவையா... ....
பாலொளி தெறிக்கும் உன்
பளிங்கு முகத்துக்கு
பௌர்ணமி நிலவுகள் ஈடாகுமா... ...








வெள்ளி, 23 மார்ச், 2012

நீ.......

உன் கண்கள் இரண்டும்
மின்னல் ஒளி வீசும் மீனினமா...
கன்னங்கள் இரண்டும்
ஒரு வானில் தோன்றும்
இரு பௌர்ணமி நிலவுகளா....
காதுகள் இரண்டும்
இடைவெளி விட்டு பூத்த
ஓரிதழ் பூக்களா......
புருவங்கள் இரண்டும்
நாடு வானில் தோன்றும்
கரிய வால் நட்ச்சதிரங்களா....
பொட்டிட்ட நெற்றி
நான் முத்தமிட வந்த
மூன்றாம் பிறையா.........

செவ்வாய், 20 மார்ச், 2012

எம் இனிய பாரதத்துக்கு நன்றிகள்...

பாசத்துக்குரிய பாரதமே!!!
பாக்கு நீரினை எமக்கிடையில்
பாரியதொரு தூரமா...???
எட்டுக் கோடி தமிழ் மக்களின்
எல்லையற்ற பாசத்தால்
எம் தாய் மண்ணில் படிந்த
கடடளவில்லா குருதிக் கறையின் ஒருபகுதி
கழுவப்பட்டு கரைகிறது

எம் கண்ணில் நீர்வடிந்தால்
உம் நெஞ்சில் உதிரம் கொட்டும்
உண்மையை நாமறிவோம்
எம் மண்ணில் பாய்ந்த குருதி
கடலிலே கரைந்து
உம் கரையை தட்டியதோ....!!!
அன்றி ஓரினம் என்று ஒன்று திரன்டீரோ..!!

வரலாறு காணாத ஏகோபித்த
ஆதரவை நீங்கள் தருகையில்
எம் நெஞ்சம் நெகிழ்கிறது...
தந்தையர் நாடாம் இந்தியா
தந்தை துணை இன்றி தனித்து
தாயவள் என் செய்வாள்....??
உங்கள் அன்பான ஆதரவில்
சிலுவையில் அறையப்பட்ட நாம்
சிறகு கொண்டு பறப்போம்
எல்லையற்ற தமிழ் வானில்...

அன்புச்செல்வன் 

உன் அழகு

அந்தி வானம் சிவக்கையில் கூட
உன் மஞ்சள் முக அழகு அங்கு
தோன்றவில்லையே.......
பூத்துக் குலுங்கும் பூக்களில் கூட
உன் கதை பேசும் விழிகளின்
காந்த சக்தியில்லையே....
கார்த்திகை மாத கார் மேகங்களில் கூட
உன் நெடுங்  குழலின் கருமை அங்கு
யொலிக்கவில்லையே......

பூக்களுக்குள் சண்டை

நீ பிறக்கமுன்பும் பூக்களுக்குள் சண்டைதான்
தங்களில் யார் அழகென்று...
நீ பிறந்தபின்னும் பூக்களுக்குள் சண்டைதான்
உன் கூந்தலில் யார் அமர்வதென்று...

திங்கள், 19 மார்ச், 2012

பல்கலைக்கழகத்தில் நாங்கள்......

கனவுகள் பல சுமந்து கம்பஸ் வந்தோம்
கடந்தது நான்கு ஆண்டுகள்தான்
ஆனால் எதிர்பார்த்த ஏணியில்
நாலு படிகூட ஏறவில்லை

குப்பி போடச் சொல்லி
குட்டிக்கரணம் போட்டு
தட்டித் தட்டி பாஸ் பண்ணிய
பாடங்களும் இங்குண்டு

கொத்துக் கொத்தாய் கோஸ் வேக்குகள்
கொப்பி பண்ணி பேஸ் பண்ணி
கொம்பிளீடும்  பண்ணினோம் -
சத்தம் போட்டு சொல்லவேண்டாம்
நாங்கள் நித்தம் படும் பாட்டையெல்லாம்

எம் தேசம்

இரத்தத்தில் தோய்ந்த
என் சொந்தங்களுக்காக
காகிதம் எடுத்து
கவிதை தொடுத்தேன்

இரத்த சூட்டில்
கொதித்து எழுந்தேன்
பேனா முனையில்
தீப்பொறி தீட்டினேன்

கொத்துக் கொத்தாய்
உடல்கள் அங்கே
இரத்த வெள்ளத்தில்
அடித்துச் செல்கிறது

கொன்று குவித்த எம்
இனத்தின் பிண்டங்களை
தின்று தீர்த்தது
இனவெறி அரசு

எஞ்சியிருக்கும் என்
இனிய சொந்தங்களை
வாஞ்சையோடு வாழவைக்க
விஞ்சி நிற்கிறேன்

அஞ்சி வாழ்ந்த
வாழ்வை விட்டு
நெஞ்சு நிமிர்ந்து
சொல்லுங்கள் தமிழனென்று

என்னை பெற்ற தாய் மண்ணே
உன் மார்பில் தவழ்ந்த குழந்தை நானம்மா
நான் உடல்கொண்ட நாளிலிருந்து
உயிர் வைத்தது உன்னிலம்மா

உன் நேசக்கற்று என்மேல்
வீசையில் நான் சலசலத்து
ஓடுகிறேன் தேனான
 என் தமிழருவியில் 


அன்புச்செல்வன்       

உங்கள் அன்புச்செல்வன்

புதிதாக தோன்றியிருக்கும் கவிஞன் நான்
தமிழ் அன்னையில் கருக்கொண்டு
உங்கள் முன் உருக்கொண்டு
தவழ்ந்து பழக நினைக்கிறேன்

என் கரம் பிடித்து நடை பழக்கி
உங்கள் தோழ் கொடுத்து உரமூட்டி
என் பயணம் தொடர உங்கள்
அன்பான வாழ்த்துக்கள் எனக்கு என்றுமே

அம்மா

வரிகளில் மிகச்சிறிய  கவிதை அம்மா ........
அர்த்தங்களில் மிகப்பெரிய கவிதை அம்மா ..........