சனி, 14 ஜூலை, 2012

வஞ்சிக் கொடியவள்


வஞ்சிக் கொடியவள் - என் 
நெஞ்சில் கொஞ்சி வரும் 
பிஞ்சுக் கிளியவள் 
நான் கண்துஞ்சும் கணத்திலும் 
என் உயிர் கெஞ்சும் 
வெண் பஞ்சுத் துகிலவள் 
கொடு நஞ்சும் அவள் 
தொட்டால் அமிர்தமாகும் 
ஜனரஞ்சக இராகமவள் 
அஞ்சியோடும் கவரிமானில் 
வாஞ்சைகொண்ட ஜனகனின் மகளவள் 

ஊரந்து வரும் மஞ்சமவள் 
மருதாணி பூசிய மஞ்சளவல் 
இடையழகில் இஞ்சியவள் 
குரலலகில் குயிலை விஞ்சியவள் 
முக அழகில் மயிலை மிஞ்சியவள் 
என் மனமாடும் ஊஞ்சலவள் 
இப் பூமி வந்த ஏஞ்சலவள்...

வெள்ளி, 13 ஜூலை, 2012

பெண்ணே...


காலை பொழுதும் புலர்கிறது_ ஆனால்
எங்களுக்கோர்  விடியலில்லை..
தரையிலே படுத்திருக்கும் ஏழைப்
பென்னினதிட்கு மோட்சமில்லை
கரை வந்து சேர்வதற்கு இந்த
பெண்ணினதிட்கு கப்பலில்லை
தத்தளிக்கும் இவர்கள் மனம்
சமுதயதிட்கு புரிவதில்லை....

சின்ந்தனயில்ல மனிதர்களின்
சீதனம் எனும் கொடுமையினால்
வேதனையில் வீழ்ந்துவிட்டாள்
சொந்தமில்லா சிலையிவள்  
தம் இழி வாழ்வுக்காய்
சீதனம் கேட்கும் காதகர் நடுவில்
வழி தவறி வந்துவிட்டாள்
எழில் மிகு நங்கையிவள்...

விதியின் வலிதான் இது என்று
இவள் நொந்து போவதா- இல்லை
வாழ வழியில்லா ஆடவரின்
வாழ்க்கை பிச்சைஎன சாடுவதா..
ஏழ்மை எனும் ஆழ்கடலில்
கண்ணீரில் மிதக்கிறாள்
கலங்கரை விளக்கேதுவுமில்லா
கரை தெரியா ஓடமிவள்

மன்கைஎன்று பிறந்தது இந்த
மயில் செய்த தவறா????
மதி கெட்ட மானுடமே - உனக்கு
மனசாட்சி இல்லையா???
மலரினை மாலையிலே தொடுபதட்கு
இளம் கொடியிடம் கூலி கேட்கும்
தரம் கெட்ட மனிதர்களும்
தரணியில் பிறந்தனரா???


செவ்வாய், 3 ஜூலை, 2012

சீதனம்


பெண்ணுக்கு பெண்ணால் போடப்படும்
விலங்குதான் சீதனம்
எந்த சீதையாய் இருந்தாலும்
சீதனம் இல்லையென்றால்
அவள் வெறும் பேதைதன்.....
நாதைகளாய் திரியும் ஆடவரும்
பெண்ணை வலை வீசி
தம்மை விலை  பேசி
சீதனம் கேட்கும்
வித்தகர்கள் ஆனார்கள்
ஆனால் வறுமையில்  பிறந்தும்
செம்மையாக வாழும் கன்னகிகளோ
கண்ணீரில் மூழ்கினார்கள்
அன்பு எனும் நகை அணிந்து
கற்பு எனும் கவசம் பூண்டு
அழகோவியமாய் வரும்
பெண்மையிடம் ஆண்மை எதிர்பாக்காது
வேறு ஒரு சீதனத்தை...