திங்கள், 19 மார்ச், 2012

எம் தேசம்

இரத்தத்தில் தோய்ந்த
என் சொந்தங்களுக்காக
காகிதம் எடுத்து
கவிதை தொடுத்தேன்

இரத்த சூட்டில்
கொதித்து எழுந்தேன்
பேனா முனையில்
தீப்பொறி தீட்டினேன்

கொத்துக் கொத்தாய்
உடல்கள் அங்கே
இரத்த வெள்ளத்தில்
அடித்துச் செல்கிறது

கொன்று குவித்த எம்
இனத்தின் பிண்டங்களை
தின்று தீர்த்தது
இனவெறி அரசு

எஞ்சியிருக்கும் என்
இனிய சொந்தங்களை
வாஞ்சையோடு வாழவைக்க
விஞ்சி நிற்கிறேன்

அஞ்சி வாழ்ந்த
வாழ்வை விட்டு
நெஞ்சு நிமிர்ந்து
சொல்லுங்கள் தமிழனென்று

என்னை பெற்ற தாய் மண்ணே
உன் மார்பில் தவழ்ந்த குழந்தை நானம்மா
நான் உடல்கொண்ட நாளிலிருந்து
உயிர் வைத்தது உன்னிலம்மா

உன் நேசக்கற்று என்மேல்
வீசையில் நான் சலசலத்து
ஓடுகிறேன் தேனான
 என் தமிழருவியில் 


அன்புச்செல்வன்       

2 கருத்துகள்:

  1. எஞ்சியிருக்கும் என்
    இனிய சொந்தங்களை
    வாஞ்சையோடு வாழவைக்க
    விஞ்சி நிற்கிறேன்

    அஞ்சி வாழ்ந்த
    வாழ்வை விட்டு
    நெஞ்சு நிமிர்ந்து
    சொல்லுங்கள் தமிழனென்று

    பதிலளிநீக்கு
  2. இரத்த சூட்டில்
    கொதித்து எழுந்தேன்

    விழ விழ எழுவோம்.
    என்றும் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு