வஞ்சிக் கொடியவள்
வஞ்சிக் கொடியவள் - என்
நெஞ்சில் கொஞ்சி வரும்
பிஞ்சுக் கிளியவள்
நான் கண்துஞ்சும் கணத்திலும்
என் உயிர் கெஞ்சும்
வெண் பஞ்சுத் துகிலவள்
கொடு நஞ்சும் அவள்
தொட்டால் அமிர்தமாகும்
ஜனரஞ்சக இராகமவள்
அஞ்சியோடும் கவரிமானில்
வாஞ்சைகொண்ட ஜனகனின் மகளவள்
ஊரந்து வரும் மஞ்சமவள்
மருதாணி பூசிய மஞ்சளவல்
இடையழகில் இஞ்சியவள்
குரலலகில் குயிலை விஞ்சியவள்
முக அழகில் மயிலை மிஞ்சியவள்
என் மனமாடும் ஊஞ்சலவள்
இப் பூமி வந்த ஏஞ்சலவள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக