செவ்வாய், 3 ஜூலை, 2012

சீதனம்


பெண்ணுக்கு பெண்ணால் போடப்படும்
விலங்குதான் சீதனம்
எந்த சீதையாய் இருந்தாலும்
சீதனம் இல்லையென்றால்
அவள் வெறும் பேதைதன்.....
நாதைகளாய் திரியும் ஆடவரும்
பெண்ணை வலை வீசி
தம்மை விலை  பேசி
சீதனம் கேட்கும்
வித்தகர்கள் ஆனார்கள்
ஆனால் வறுமையில்  பிறந்தும்
செம்மையாக வாழும் கன்னகிகளோ
கண்ணீரில் மூழ்கினார்கள்
அன்பு எனும் நகை அணிந்து
கற்பு எனும் கவசம் பூண்டு
அழகோவியமாய் வரும்
பெண்மையிடம் ஆண்மை எதிர்பாக்காது
வேறு ஒரு சீதனத்தை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக